கோவிட் 19 நிவாரண பணி - ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் -இரண்டாம் தினம்- 9.5.21, ஞாயிற்றுக்கிழமை.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு மற்றும் திருவோணம் ஒன்றியங்களின் கிராமிய - நாட்டுப்புறக் கலைஞர்களின் 150 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டன.
ஒவ்வொரு பகுதியிலும் கலைஞர்கள் நாதஸ்வரம், நையாண்டி மேளம் மற்றும் பறை வாசித்தும் கோலாட்டம் ஆடியும் (ஆடிய ஒரு பெண் கலைஞருக்கு வயது 72!) பக்தி பூர்வமாகப் பாடியும், அந்த மக்களுக்குச் சேவை செய்யச் சென்ற எங்களுக்கு வரவேற்பு அளித்தனர்.
சுவாமி விவேகானந்தர் கூறுவார்: 'எப்போதும் கொடுப்பவனின் மன நிலையில் இரு.' அந்த ஒரு சிறந்த மனநிலை கொண்ட இன்று சிரமப்படும் இந்தக் கலைஞர்கள் நம்மிடமிருந்து பொருள்களை வாங்கிக் கொள்வதற்கு முன்பு தமது கலைகளால் நம்மை மகிழ்வித்த பிறகே அவர்கள் பொருள்களைப் பெற்றுக் கொண்டனர்.